205 குழந்தைகள் உட்பட 14,400 பேர் நடுக்கடலில் மாயம்

கடந்த வருடத்தில் ஸ்பெயினுக்குச் செல்ல முயன்ற, 205 குழந்தைகள் உட்பட 4,400இற்க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், கடலில் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கையானது, கடந்த வருடத்தினை விடவும், இரண்டு மடங்கு அதிகமென, கண்காணிப்பு குழுவான நடைபாதைக்கான எல்லைகள் அமைப்பு (Walking Borders) குறிப்பிட்டுள்ளது.

கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அபாயகரமான பாதைகள், மற்றும் பழுதடைந்த படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்குச் செல்லும் சில கப்பல்களினால் ஏற்படும் பயம் என்பனவே, புலம்பெயர்ந்தோரின் மரணத்திற்கு முக்கிய காரணமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021 டிசம்பர் 20ஆம் திகதி வரையிலான தரவுகளின் படி. 4.400 பேரில் 90 சதவிதத்திற்கும் மேற்பட்டோர், அட்லாண்டிக் பெருங்கடலில், ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த விபத்துக்களில், காணாமற்போனவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு விபத்திற்குள்ளாகும், ஒவ்வொரு படகு குறித்தும், விசாரணை நடத்தப்படுவதாகவும், கடலில் காணாமற்போய், ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டால், அவர்கள் இறந்துவிட்டதாக கருதப்படுமெனவும், நடைபாதைக்கான எல்லைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஸ்பெயின் அதிகாரபூர்வ புள்ளி விவரங்களின் படி, கடந்த வருடம் சுமார் 39,000 புலம்பெயர்ந்தவர்கள், வெற்றிகரமாக ஸ்பெயினை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Spread the love