2022 ஐ.பி.எல். கிண்ணம் குஜராத் டைட்டன்ஸ் வசம்

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி கப்டன் சஞ்சு சாம்சன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 22 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கப்டன் சஞ்சு சாம்சன் 14, தேவ்தத் படிக்கல் 2 ஓட்டங்களில் வெளியேற ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஜோஸ் பட்லர் 39 ஓட்டத்தில் வெளியேறினார். ஹெட்மயர் 11, அஸ்வின் 6, டிரெண்ட் போல்ட் 11 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை பெற்றது.

குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 131 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. துடுப்பாட்டத்தில் சுப்மான்கில் – மில்லர் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் சுபிமான் கில் 45 (ஆட்டமிழக்காது), கார்த்திக் பாண்டியா 34, மில்லர் 32 (ஆட்டமிழக்காது) ஓட்டங்களை எடுத்தனர். பந்துவீச்சில் போலட், பிரசாத் கிருஸ்னா தலா ஒருவிக்கெட்டை கைப்பற்றினர்.

Spread the love