2025ஆம் ஆண்டு புதிதாக 05 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனேடிய அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 02 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாக கனேடிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் கனடாவில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.