விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமானது – தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்

உலக கிரிக்கெட்டில் முதல் 4 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருக்கு பந்து வீசப்போகிறேன் என தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென்ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கப்டன் விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமானது என்று தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் தெரிவித்துள்ளார்.

உலக தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிரான இந்த தொடர் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தொடர் இது ஒரு உற்சாகமான சவால். விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமாக இருக்கும். ஆனால் அதை உற்சாகமாக எதிர்பார்க்கிறேன். உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசப்போகிறேன். என்னை பொறுத்தவரை முதல் போட்டியில் சிறப்பாக செயல்படுவது முக்கியம். இங்குள்ள சூழ்நிலையை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். என்று அவர் கூறினார்.

Spread the love