சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் செரிமான மண்டலம் மேம்படும். குறிப்பாக செரிமான பகுதிக்குள் பல்வேறு வாயுக்கள் உள்ள என்சைம்கள் உற்பத்தியாகி சாப்பிட்ட உணவு விரைவில் ஜீரணம் ஆவதற்கு உதவும்.

மாறிவரும் வாழ்வியல் சூழலால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பதை எல்லாம் நாம் பெரிய அளவில் பின்பற்றுவதில்லை. இதனால் பல்வேறு பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பது நாம் அறிந்தது தான். ஆனால், இவற்றை செய்வதால் உடலுக்கு பெரிய நோய்கள் எதுவும் வராது என்கின்றனர் மருத்துவர்கள். பெரிய அளவில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும், சிறிய அளவில் நடைப்பயிற்சி செய்தால் கூட நல்லது தான். குறிப்பாக சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

செரிமானம் : சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் செரிமான மண்டலம் மேம்படும். குறிப்பாக செரிமான பகுதிக்குள் பல்வேறு வாயுக்கள் உள்ள என்சைம்கள் உற்பத்தியாகி சாப்பிட்ட உணவு விரைவில் ஜீரணம் ஆவதற்கு உதவும். மேலும் வயிற்று உப்புசத்தையும், மலச்சிக்கல் பிரச்சனையையும் இது தடுக்கிறது.

செயல்பாடு : உடலின் செயல்திறன் அதிகரிப்பதற்கு நடைப்பயிற்சி சிறந்த ஒன்றாகும். அதுவும் சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்தால் அதிக கலோரிகளை எரித்து உடல் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். மேலும் சாப்பிட்ட பிறகு ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருந்தால் அது உடல் எடையை கூட்டுவதற்கு மட்டுமே உதவும்.

எதிர்ப்பு சக்தி : உடலில் நோய்களை எதிர்த்து போராட கூடிய முக்கிய பகுதி இந்த எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். செரிமானம் சீராக நடந்தாலே எதிர்ப்பு சக்தி மண்டலமும் சீராக வேலை செய்யும். எனவே இதற்கு தினமும் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்து வந்தால் போதும். இப்படி செய்வதால் நச்சுக்களை வெளியேற்றி, உட்புற உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க முடியும். இதனால் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

தூக்கம் : ஆரோக்கியமான தூக்கத்தை பெற இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்லலாம். இதனால் உங்களின் ஹார்மோன்கள் சீராக இருக்கும். மற்றும் நல்ல மனநிலையை பெற்று நிம்மதியாக தூக்கம் வரும்.

சர்க்கரை அளவு: பொதுவாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறையும். எனவே இரவில் சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்தால் சர்க்கரை அளவை சீராக வைக்க முடியும். குறிப்பாக நீண்ட நாட்களாக நோய்களை கொண்டவர்கள் இது போன்று செய்து வருவது மிக நல்லது.

மன அழுத்தம் : இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஏழை முதல் பணக்காரர் வரை எல்லோருக்கும் பல்வேறு மனநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. எனவே மன அழுத்தம் இல்லாமல் இருக்க இரவு சாப்பாட்டிற்கு பிறகு நடைப்பயிற்சி செய்யுங்கள். இதனால் எண்டோர்பின் என்கிற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரந்து மனநிலையை சீராக வைக்கும்.

Spread the love