திமுக பணம் கொடுப்பதாக பாஜக குற்றச்சாட்டு – சாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது (காலை 7 மணி) தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அவ்விதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறறு வருகின்ற இவ்வேளையில் . காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள் என்று பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில்  63-வது வார்டில் வாக்காளர்களுக்கு திமுக கட்சியினர் பணம் கொடுப்பதாக கூறி வாக்கு பதிவு நடைபெறும் திருமண மண்டபத்தை பாஜக கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பான  சூழ்நிலை நிலவி வருகின்றது

Spread the love