வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு

இன பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.

“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீள பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்று முதல் எதிர்வரும் 10  ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

source from newsfirst
Spread the love