லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையினால் இன்றைய தினம் லிட்ரோ எரிவாயுவிள் விலை அதிகரிக்கப்படும் என அவர் முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும், முன்னதாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிவாயு கையிருப்பில் உள்ளமையால் தற்போதைய நிலையில் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதைய விலையில் லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love