ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்க கதை தயார்

சாய்பல்லவி அறிமுகமான பிரேமம் படத்தின் மூலம் இயக்குநராக புகழ்பெற்றவர் அல் போன்ஸ் புத்ரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிருத்விராஜ். நயன்தாரா நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கியுள்ளார். அடுத்து அவர் பகத்பாசில், நயன்தாரா நடிக்கும் பாட்டு என்ற படத்தை இயக்கவுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்று கூறிவந்த அல்போன்ஸ் புத்திரன் தற்போது ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் வகையிலான கதை ஒன்று தன்னிடத்தில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குமான ஒரு கதையை வைத்துள்ளேன். இருவரையும் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதையை கூறுவேன், அந்த கதை நிச்சயம் இருவருக்கும் பிடிக்கும், ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் இன்னும் என் வாழ்நாளில் இருவரையுமே ஒரு முறை கூட சந்திக்கவில்லை.

Spread the love