முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றத் தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வழக்கொன்றில் விதிக்கப்பட்ட அபராதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாகவிருந்த டொனால்ட் ட்ரம்பிற்கு, அமெரிக்காவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், அவரது தொழில் நிறுவனம் குறித்த வழக்கு நியூயோர்க் நீதி மன்றத்தில் நடந்துவருகின்றது.

இந்த வழக்கில் ட்ரம்ப் தரப்பு ஆவணங்களைச் சமாளிப்பதற்கு , முதலில் மார்ச் 3ஆம் திகதி வரையிலும், அதன் பின்னர் மார்ச் 31ம் திகதி வரையிலும், கால அவகாசம் நீடிக்கப்பட்டது. எனினும், குறித்த காலத்தில் ட்ரம்ப் ஆவணங்களை சமர்பிக்கவில்லை . இதன் காரணமாக ட்ரம்ப் தரப்பு ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் வரை, தினமும் 10 ஆயிரம் டொலர்களை அபராதமாக செலுத்தவேண்டுமென, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Spread the love