மிகை வரி சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று (22) காலை பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை சபைக்கு அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love