ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மை மாகாணத்தில் 6.1 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று நேற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 350 கிலோ மீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாகவும் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த நிலநடுக்கம் தொடர்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. அதேவேளை ஷிங்கன் சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் வழக்கம் போல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Spread the love