மக்கள் எதிரிகள் இல்லை குமார் சங்கக்கார தெரிவிப்பு

இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர். நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட கடினமானதாக காணப்படுகின்றது. மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி என்ன தேவையோ அதனை கேட்கின்றனர் – ஒரு தீர்வு சிலர் தங்கள் குரல் வெளிப்படுவதற்காக மனக்கசப்பு மற்றும் சீற்றத்துடன் செயற்படும் அதேவேளை ஏனையவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர். மக்களை செவிமடுப்பதும், அழிவை ஏற்படுத்தும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சிநிரல்களை ஒதுக்கி வைப்பதும், நாட்டின் சிறந்த நலனை கருத்தில்கொண்டு செயற்படுவதுமே சரியான தீர்வாகும். மக்கள் எதிரிகள் இல்லை, மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டும் வழங்க வேண்டும்.

Spread the love