510 மில்லியன் டொலர்களை வழங்கிய உலக வங்கி!

மருத்துவமனைகளின் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர மருந்து கொள்வனவுக்காக உலக வங்கி உடனடியாக 10 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

அத்துடன், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுக்காக மேலும் 500 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உயிர்காப்பு மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் மருத்துவ அவசர நிலையை அறிவிக்குமாறு சுகாதார தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love