மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்த ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்கிறார்

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானி கராயத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானி கராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் வரவேற்றார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக்குறிப்பை எழுதிய ஜனாதிபதி 7 தசப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவுபடுத்தினார். எதிர்வரும் 19ஆம் திகதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Spread the love