பேரறிவாளனை பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு பிணை வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கெனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் பிணை வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் பிணை வழங்கப்படுகிறது என்றும் ஜோலார் பேட்டை பொலிஸ் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


Spread the love