பெரியார் சிலை அவமதிப்பு கவிஞர் வைரமுத்து கண்டனம்

பெரியார் சிலைக்கு செருப்பு அணிவிக்கப்பட்டமைக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடியை தூவியும் அவமரியாதை செய்துள்ளனர். இந்நிலையில், பெரியார் சிலை அவமதிப்பு குறித்து 2 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிரிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளதை அவதானித்துள்ளனர்.

Spread the love