புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்- ரணில்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


நாடு தற்போதைய நிலைமையில் மிகப்பெரிய உணவு நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் எதிர் பார்க்கின்றோம். மக்களுக்கு உதவுவதற்காகச் சில குழுக்களை நியமித்துள்ளோம். அந்தக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எவரும் உதவிகளைச் செய்யலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் மாத்திரம் அல்ல உள்நாட்டில் இருப்பவர்களும் உதவிகளைச் செய்ய முடியும் என்றார் ரணில் விக்கிரமசிங்க. 

Spread the love