பிரான்ஸில் தொடரும் அமைதியின்மை- 77 பேர் பொலிஸாரால் கைது

பிரான்ஸில் குறைந்தது 77 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிரான்ஸ் போக்குவரத்து பொலிஸாரின் கட்டளையை மீறி, வாகனத்தை நிறுத்தாமல் பயணித்த 17 வயதுடைய இளைஞரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து, இரண்டாவது நாளாக இன்றும் நிலவும் அமைதியின்மையை தொடர்ந்து குறித்த 77 ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை மன்னிக்க முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

Spread the love