பிரபல தொழில் அதிபர் வீட்டில் ஐடி ரெய்ட் – கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றபட்டுள்ளது

இந்தியாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மத்தியபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் தொழிலதிபர் சங்கர் ராய். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது சங்கர் ராய் சினிமா பாணியில் வீட்டு தண்ணீர் தொட்டிக்குள் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தண்ணீர்த் தொட்டிக்குள் 500 ரூபாய் நோட்டுகள் ஆக சுமார் 1 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது வீட்டில் பல இடங்களில் இருந்தும் 2,000 ரூபாய் நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதுமட்டும் இல்லாமல் பல இடங்களில் இருந்து தங்க பிஸ்கட்டுகளும் கிடைத்துள்ளன. இவரது வீட்டில் வருமான வரித்துறை சுமார் 39 மணி நேரம் ஐடி ரெய்டு நடத்தியுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் 1 கோடி ரூபாய், வீட்டின் இதர இடங்களில் இருந்து 8 கோடி ரூபாய் மொத்தமாக 9 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

Spread the love