ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை

நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து நடிகர், நடிகைகளுக்கு கொரோனா என்கிற செய்தி வெளியாகி திரையுலகினரை கலக்கமடைய செய்துள்ள நிலையில், நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா அசுர வேகம் எடுத்து பரவி வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மருத்துவர்கள், சாமானியர்கள் என பாரபட்சமின்றி அனைவருக்கும் கொரோனா பரவி வருகிறது.

திரைத்துறையை பொறுத்தவரை ஏற்கனவே பிரபல நடிகர் மகேஷ் பாபு, நடிகை த்ரிஷா, நடிகர் விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட பல படங்களில் நடித்த நடிகை ஷோபனா. தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் நான் ஒமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது. நான் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Spread the love