பாராளுமன்றில் அமைதியின்மை!அமர்வுகள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். பாராளுமன்றில் எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதற்கமைய, 16ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love