இலங்கையில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, முழுமையான ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் கணக்கில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் சுதந்திரம் இருக்க வேண்டுமெனத் தெரிவித்தார். இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமெனவும், இவ்வாறானவர்களைக் கைது செய்யக் கூடாதெனவும், அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டினார்.

https://mobile.twitter.com/USAmbSL/status/1521809379355676672

Spread the love