பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி பிரயோகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.  குஜ்ரன்வாலா (Gujranwala) நகரில் பேரணியொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வலது காலில் காயமடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஆட்சியிலுள்ள ஷெபாஷ் ஷெரீப்பின் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நீண்ட பேரணியின் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பேரணியில் உரையாற்றுவதற்காக வாகனமொன்றில் நின்றுகொண்டிருந்த போதே இம்ரான் கான் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Spread the love