பல்கலை மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

பத்தரமுல்லை – தியத்த உயன பாராளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் பாராளுமன்றம் அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாராளுமன்றத்தை அடைவதைத் தடுக்கும் வகையில் வீதித்தடைகள் இடப்பட்டிருந்த போதும், மாணவர்கள் முதலாவதாக இடப்பட்டிருந்த வீதித் தடையை அகற்றி முன்நோக்கிச் சென்றனர். இதனையடுத்து, பொலிஸார் அவர்களைக் கலைக்க நடவடிக்கை எடுத்தனர். போராட்டக்காரர்கள் இரண்டாவதாக இடப்பட்டிருந்த வீதித்தடையையும் உடைத்ததால், மூன்றாவது தடையை நோக்கி பொலிசார் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.facebook.com/watch/?v=673012907138015 (source from newsfirst)

Spread the love