பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழிலிருந்து ஆறு வீரர்கள்

இலங்கை பல்கலைக்கழக தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ்.மாவட்டத்தில் இருந்து 6 வீர,வீராங்கனைகள், முகாமையாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட தேசிய ஆண்கள் அணியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தெ.வேணுயன், யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அ.சுஜீவன், களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சு.துவாரகன் ஆகியோருடன் இலங்கை பல்கலைக்கழக தேசிய ஆண்கள் அணியின் முகாமையாளராக யாழ். பல்கலைக்கழக போதனாசிரியர் இ. அருளம்பலம் இலங்கை பல்கலைக்கழக தேசிய பெண்கள் அணியின் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொ.கீர்த்தனா, க.துஷ்யந்தினி, கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பு.சானுஜா, அ.தர்சிகா ஆகியோருடன் இலங்கை பல்கலைக்கழக தேசிய பெண்கள் அணியின் முகாமையாளராக யாழ். பல்கலைக்கழக போதனாசிரியர் திருமதி. ஜெ.சரவணபவ ஐயர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 53 ஆவது சிரேஷ்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இவ்வீரர்கள் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Spread the love