பலத்த மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது

பலத்த மழை காரணமாக நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் கங்கைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குக்குளேகங்க நீர்த்தேக்கம் மற்றும் தெதுரு ஓயா ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

source from newsfirst
Spread the love