பலத்த மழையுடனான வானிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலை இன்றும்(20) நாளையும்(21) சிறிதளவில் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, மேல், சபரகமுவ, மத்திய, வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Spread the love