இன்று(20), நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(20) மற்றும் நாளை(21) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரசிலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு நேற்று(19) கூடியது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love