பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டையின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக கோழி இறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாவில் இருந்து 1,400 ரூபாவாக அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அஜித் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love