ஒருபுறம் ஆர்ப்பாட்டங்கள், மறுபுறம் காணி அபகரிப்பு

ஒருபுறம் அரசாங்கத்தை அகற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மும்முரமாக இடம்பெற்று வரும் அதேவேளை மறுபுறம் தமிழரின் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மை சிங்கள மக்களால் அபகரிக்கப்படும் சம்பவங்களும் மிகவும் நூதனமான முறையில் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இவ்வாறு அபகரிக்கப்படும் சம்பவமொன்று மட்டக்களப்பு களுவங்கேணி, புன்னைக்குடா பகுதியில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த பகுதிகள் முன்னர் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளங்களாக இருந்த பகுதிகளாகும். இந்த பகுதிகளுக்குள் சென்ற சிங்கள இனத்தவர்கள் அங்கிருந்த பெறுமதியான சவுக்கு மற்றும் பனை மரங்களுக்கு தீ வைத்து அவற்றை அழித்து பாரிய கட்டடம் ஒன்றை அமைத்து வருகின்றனர்.

இவ்வாறு செயற்படும் அவர்கள் மாவட்ட அரச அலுவகத்திலோ அல்லது பிரதேச சபையிலோ எவ்வித அனுமதியும் பெறவில்லை. அத்துடன் புதையல் தோண்டும் வகையிலான பாரிய கிடங்கும் அங்கு வெட்டப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

Spread the love