நெல் இருப்புக்களை பாதுகாக்க நடவடிக்கை – விவசாய அமைச்சு

வரட்சியின் காரணமாக நெல் கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் நெல் இருப்புக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. மதுபானம் மற்றும் கால்நடை தீவன உற்பத்திக்கான நெல் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சரின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சின் செயலாளருக்கு தேவையான ஆவணங்களை அமைச்சின் வர்த்தக செயலாளருக்கும், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான ஜனாதிபதி குழுவிற்கும் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சி நெல் அறுவடையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Spread the love