நாமலுக்கு மீண்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை வழங்குமாறு கோரிக்கை

விளையாட்டு சங்க அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக விளையாட்டுத்துறை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத்துறையை தன்னிச்சையாக கட்டுப்படுத்த அமைச்சு தயாராகி வருவதாகவும், சரியான திட்டமிடல் மற்றும் எதிர்கால பார்வை இன்றி இலங்கையில் விளையாட்டுகள் தற்போது வழிதவறி வருவதாகவும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட திட்டம் இன்றி மேற்கொள்ளப்படும் இந்தச் செயற்பாடுகளினால் விளையாட்டுத்துறையின் எதிர்காலம் பாரிய ஆபத்தில் உள்ளதாக நாமல் ராஜபக்ஷவிடம் அவர்கள் சுட்டிக்காட்டினர். நாமல் ராஜபக்ஷ விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனக்கு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை எனவும், தேவைப்பட்டால் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளவும் தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ இங்கு தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை, துறைமுகம் உட்பட பல அமைச்சுகளின் அமைச்சர்கள் மாறப்போவதாக கடந்த வாரம் அரசியல் களத்தில் பேசப்பட்டது.

Spread the love