நான்காவது டோஸ் தடுப்பூசியை வழங்கிய முதல் நாடாக இஸ்ரேல்

நான்காவது டோஸ் தடுப்பூசியை வழங்கிய முதல் நாடாக இஸ்ரேல் பதிவாகியுள்ளது. Omicron தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் 04 ஆவது டோஸ் தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தொற்றுநோயியல் தொடர்பான நிபுணர்கள் குழுவினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அந்நாட்டு பிரதமர் Naftali Bennett வரவேற்றுள்ளார்.

Spread the love