நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த மஹிந்த!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு அத்தியாவசிய பொருட்களுக்கான நாட்டின் நிலைமையை சீர் செய்ய முடியாமை போன்ற காரணங்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் கை கொடுத்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு அண்மையில் பொருளாதார அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் வசதிகள் வழங்கியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love