நடிகை சமந்தாவிற்கு, நயன்தாரா கொடுத்த பரிசு

தமிழ்-தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளாக இருக்கும் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இப்போதெல்லாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். காரணம் அவர்கள் ஒன்றாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான்.

விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவர்கள் இருவரும் தான் நாயகிகள். படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகிவிட்டது, படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் முழுவதும் முடிந்திருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்ததில் இருந்து சமந்தா-நயன்தாரா இருவரும் ஆரோக்கியமான நட்பை பாராட்டி வருகிறார்கள்.

நயன்தாராவின் பரிசு

இந்த நிலையில் நடிகை சமந்தாவிற்கு, நயன்தாரா ஒரு அழகான காதணியை பரிசாக கொடுத்துள்ளார். அதை நடிகை சமந்தா இன்ஸ்டாவில் ஷேர் செய்து நயன்தாராவிற்கு நன்றி கூறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்ததால் சமந்தாவிற்கு, நயன்தாரா இந்த பரிசு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது

இதோ அந்த அழகான காதணி,

Spread the love