தேர்வுத் துறையின் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் பரீட்சை காலத்தில் நடத்தப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனவரி 18ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை கல்வி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை குறித்த நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது தரப்பினரோ இந்த விதிமுறைகளை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் திணைக்களம் கோரியுள்ளது.

Spread the love