கடதாசி தட்டுப்பாடு காரணமாக வினாத்தாள் அச்சிடுவதில் சிக்கல்..

நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலை காரணமாக கடதாசி தட்டுப்பாடு ஏற்பட்டகாரணத்தால் வினாத்தாள் அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப்பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்தார்.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு ஆண்டு 09, 10 11 ஆம் ஆண்டுகளுக்கான தவணைப்பரீட்சைகளை கூடியமட்டும் ஒத்திவைக்குமாறும், பாடசாலை மட்டத்தில் ஆரம்ப தரப்பரீட்சைகளை முடிந்த மட்டும் நடத்துமாறும் அதிபர்களுக்கு சுற்று நிரூபத்தின் மூலம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடதாசி தட்டுப்பாடு ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக வினாத்தாள்கள் அச்சிடுவதில் மிகுந்த சிரமத்தை தாம் சந்திப்பதாகவும் அதன் காரணமாக இம்முறை தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் அச்சிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கமும் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக வினாத்தாள்களை அச்சிடாமல் வன்தட்டில் சேமித்து அதிபர்களிடம் ஒப்படைக்க மேல்மாகாண கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Spread the love