தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தி

2022 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 329,668 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 20,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 10,585, தென் மாகாணத்தில் 6,812, வடமேற்கு மாகாணத்தில் 6,601, சப்ரகமுவ மாகாணத்தில் 5,170, மத்திய மாகாணத்தில் 5,017, வடமத்திய மாகாணத்தில் 3,957, ஊவா-887, கிழக்கு மாகாணத்தில் 3,479 , வட மாகாணத்தில் 2,749 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

Spread the love