டாலர் இல்லை! தேங்கிய கொள்கலன்கள்

தற்போதைய டொலர் தட்டுப்பாடு காரணமாக 1700 இற்கும் அதிகமான அத்தியாவசிய பொருட்கள் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி தனது டொலர் கையிருப்பை வர்த்தக வங்கிகளுக்கு வழங்கவில்லை என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க மத்திய வங்கி தலையிட்டு வருவதாக அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். தற்போதைய நிலைமை காரணமாக தமது உறுப்பினர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Spread the love