டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் ஓய்வு பெறவுள்ள சுமார் 25,000 அரச ஊழியர்கள்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். பெருந்தொகையான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் போதிய அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருக்கின்றனர்.

எனவே அரச சேவையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது. ஏறக்குறைய 250 அரச வைத்தியர்களும் இம்மாத இறுதியில் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர். இதேவேளை 1,200 செவிலியர்கள் 60 வயதை எட்டியதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34,000 பட்டதாரிகளுக்கு, ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love