ஜனாதிபதி – ததேகூ சந்திப்பு இன்று நடைபெறாது – ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இன்று (15) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஏற்கனவே தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இன்று (15) நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கப்போவதாக ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்திருந்தது. ஆனால் அவை எல்லாமே எதிர்பார்த்தது போன்று இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பும் இறுதி நேரத்தில் இரத்த்துச் செய்யப்படும் என ஏற்கனவே அதிக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் இனப்பிரச்சனை என்கின்ற ஒன்றே இல்லை எனும் நிலைப்பட்டை வெளிப்படுத்தி வரும் ஜனாதிபதி, குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க ஏன்ன தேவை இருக்கின்றது என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Spread the love