சீனா நோக்கி பயணிக்கவுள்ள சீன கப்பல் (Yuan Wang 5)

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்றைய தினம் மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளது. இதற்கமைய இன்று மாலை 04 மணிக்கு மீண்டும் குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர் மாஸ்ட்டர் கப்பல் தலைவர் நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார்.


அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. சீனாவின் குறித்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்தமைக்கு இந்தியா பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.


இந்நிலையில், குறித்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முன்னதாக தீர்மானிக்கப்பட்ட தினத்திற்கு அமைய சீனாவின் Yuan Wang 5 கப்பல் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love