சி.ஐ.டி கட்டிடத்திலிருந்து விழுந்து பெண் மரணம்

சி.ஐ.டி கட்டிடத்திலிருந்து விழுந்து பெண் மரணம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்த சம்பவமொன்று இன்று(11) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

6 கோடி ரூபா பண மோசடி சம்பவத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love