கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீன அரசினால் புலமைப்பரிசில் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் சீன அரசின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந் தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான உதவித் தொகையாக 4.3 மில்லியன் ரூபா நிதி சீனத் தூதுவர் நேற்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்திடம் கையளித்துள்ளார். சீன அரசின் புலமைப்பரிசில் வழங்கும் விழா கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு அறிவியல் பீட மண்டபத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக சீனத் தூதுவர் சின் செங் மற்றும் திருமதி.சின் செங் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். சீன அரசின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக கல்விசார்ந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் வண்ணம் அதன் முதற்கட்டமாக சீனத் தூதுவரால் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு முதற்கட்டமாக மாதாந்தம் தலா 4ஆயிரம் ரூபா வீதம் ஏழு மாதங்களுக்கான உதவித் தொகையாக 4.3 மில்லியன் ரூபா சீனத் தூதுவரினால் கிழக்கு பல்கலைக்க முகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கத்திடம் கையளிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அன்பளிப்பு தொகையும் சீன தூதுவர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சீன தூதரகத்தின் உத்தியோகத்தர்கள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், வல பக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களில் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்,

Spread the love