சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம்: அரசாங்கம் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதத்தை அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்றத்தினைக்கூட்டி இதற்கான விவாதம் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு இச்செய்தியை தமது அறிக்கையிலே தெரிவித்திருந்தது. குறித்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் குறித்த அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது, என சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது.

Spread the love