சரத் ​​வீரசேகர ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம்

ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு ஆலோசகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரவை அமைச்சரான வீரசேகர, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இருந்து பணியாற்றவுள்ளார். ஜனாதிபதியின் புதிதாக அறிவிக்கப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு வீரசேகர பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love