சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை முற்றுமுழுதாக மறுக்கும் இந்தியா

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊகங்களின் அடிப்படையில் பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றுமுழுதாக மறுக்கின்றது.

இச்செய்திகளும் இவ்வாறான நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நேற்றையதினம் மிகவும் தெளிவாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love