கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்

இந்தியாவினால் வழங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடனுதவியில் இருந்து 40,000 மெட்ரிக்தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலைப் வரவேற்கும் நிகழ்வில் எரிசக்தி அமைச்சரும் சிபெட்கோ நிறுவனத்தின் தலைவருமான காமினி லொகுகே கலந்துகொண்டார். இந்திய கடன் வசதியின் கீழ் வழங்கப்படும் நான்காவது எரிபொருள் இதுவாகும், கடந்த 50 நாட்களில் இந்தியா 200,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

Spread the love