இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை ?

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிய வருகின்றது.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love